உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

 கடலூர்: 

                 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி துறை, தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகளுக்கிடையே நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கடலூர் மாவட்ட வேலைவய்ப்பு பயிற்சி துறை மற்றும் தனியார் தொழிற் பயிற்சி பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் செயின்ட் ஜோசப் ஐ.டி.ஐ., முதல்வர் எட்வர்டு ஜெயக்குமார் வரவேற்றார். மகாலட்சுமி ஐ.டி.ஐ., தாளாளர் ரவி, ஆர்.கே., ஓட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் பள்ளி தாளாளர் முகுந்தன் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசுகள் வழங்கினார். முருகவேல் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior