உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

தொடர் திருட்டு சம்பவம்: வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது


கடலூர்: 

                பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆசாமியை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். காட்டுமன்னார்கோவிலை அடுத்த தெம்மூர் பெரிய தெருவைச் சேர்ந்தவர் பாலமுத்து. இவரது மகன் ஜெயா என்கிற ஜெய்சங்கர்(35). இவர் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் புடையவர்.இவர் மீது நெய்வேலி தர்மல், மந்தாரக்குப்பம், சிதம்பரம் டவுன், குமராட்சி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தும் ஜெய் சங்கர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, கடலூர் எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சீத்தாரமன், திருட்டு ஆசாமி ஜெய்சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன் பேரில் குமாராட்சி போலீசார் ஜெய் சங்கரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior