உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

சாத்திப்பட்டில் கால்நடை மருத்துவமனை சட்டசபையில் அமைச்சர் உறுதி


நெல்லிக்குப்பம்:

                 சாத்திப்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை துவங்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நெல்லிக்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் பேசும் போது, 'என் தொகுதிக்குட்பட்ட அண்ணாகிராமம் ஒன்றியம் சாத்திப் பட்டு கிராமத்தில் விவசாயத்தை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். இவர்களிடம் ஆடு, மாடு கோழி என 7,000 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.
 
                    அருகில் உள்ள ஊர்களிலும் அதிகளவு கால்நடைகள் உள்ளன. முந்திரி விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் கால்நடை வளர்ப்பை நம்பியே வாழ்கின்றனர். அப்பகுதியில் குறைந்த பட்சம் கால்நடை கிளை நிலையம் அமைத்து தர வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த கால்நடை துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி 'ஒரு கிராமத்தில் 3,000 மேல் கால்நடை இருந் தால் கிளை நிலையமும், 10 ஆயிரத்திற் கும் மேல் இருந்தால் கால்நடை மருந்தகமும் துவங்க முடியும். சாத்திபட்டு கிராமத்தில் எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் கூறியபடி எண்ணிக்கைக்கு தகுந்த படி கிளை நிலையம் துவக்கப்படும்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior