உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

கடலூரில் கேட்பாரற்று கிடந்த சினிமா 'ரீல்' பெட்டியால் பரபரப்பு

 கடலூர்: 

                 கடலூர் பீச் ரோட்டில் கேட்பாரற்று கிடந்த சினிமா 'ரீல்' பெட்டியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
 
                  கடலூர் பீச் ரோட்டில் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை 7 மணிக்கு சினிமா ரீல் பெட்டி ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் அங்கு சென்று பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் 'தமிழ் படம்' சினிமாவின் 'ரீல்'கள் எட்டு பாக்சில் அடுக்கி வைக் கப்பட்டிருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் இருந்து கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள செல்வ விநாயகர் வினியோகஸ்தரின் முகவரிக்கு படப்பெட்டி வந்திருப்பதும், அரசு பஸ்சில் கடலூர் பஸ் நிலையம் வந்த பெட்டியை யாரோ கொண்டு வந்து பீச்ரோட்டில் போட்டதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் ரீல்பெட்டியை கைப்பற்றி வந்து செல்வ விநாயகா வினியோகஸ்தரிடம் ஒப்படைத்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior