உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

ரயில்வே கேட் பழுது போக்குவரத்து பாதிப்பு

 நெல்லிக்குப்பம்: 

         நெல்லிக்குப்பத்தில் ரயில்வே கேட் பழுதானதால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
              விழுப்புரத்தில் இருந்து நேற்று மாலை அகல ரயில் பாதையில் கடலூர் நோக்கி ரயில் இன்ஜின் மட்டும் இயக்கப்பட்டது. ரயில் இன்ஜின் வருவதையொட்டி நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட் டது. ரயில் இன்ஜின் கடந்த பிறகு கேட்டை திறக்க பணியா ளர் முயற்சி செய்தார். ஆனால் கேட் பழுதானதால் திறக்க முடியவில்லை. 45 நிமிட போராட்டத் திற்கு பிறகு பழுது சரிசெய்யப்பட்டு கேட் திறக்கப்பட்டது. இதனால் ஆலைக்கு செல்லும் வாகனங்கள், ஆட்டோக்கள் செல்ல முடியாமல் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior