உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

திட்ட ஒருங்கிணைப்பாளர் மீது தாக்குதல் விருத்தாசலம் அருகே மூன்று பேர் கைது


விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் அருகே வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஒருங்கிணைப்பாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அபிஷேகபாக்கம் பகுதி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (34). இவர் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் விருத்தாசலம் அடுத்த சிறுமங்களம் பகுதி ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் பகுதிக்குட்பட்ட மன்னம்பாடி காலனியை சேர்ந்த சீனுவாசன் மனைவி அலமேலு (25) வாழ்ந்து காட்டுவோம் திட்ட ஊராட்சி குழுவில் இணை செயலாளராக உள்ளார். இதனால் திட்டம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து பாஸ்கர் அடிக்கடி போனிலும், நேரிலும் அலமேலுவிடம் பேசி வந்துள்ளார்.

                   இதை தவறாக நினைத்த அலமேலுவின் கணவர் சீனுவாசன்(32) மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 19 ம் தேதி மன்னம்பாடி கிராமத்திற்கு திட்ட குழுவினருடன் ஆய்வு பணிக்கு வந்த பாஸ்கரை தாக்கினர். இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து அலமேலுவின் கணவர் சீனிவாசன் (32) மற்றும் உறவினர் களான ஐயாசாமி மகன் சீனிவாசன் (29), ராகவன் மகன் தமிழரசன்( 28) ஆகிய மூவரையும் கைது செய்தனர். வேல்முருகனை தேடி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior