உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 23, 2010

திட்டக்குடி தாலுகா மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி துவக்க முகாம்

திட்டக்குடி: 

                திட்டக்குடி தாலுகா மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் துவங்கியது.

                 திட்டக்குடி தாலுகாவில் 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை நடைபெற உள்ளது. இப்பணியில் ஈடுபடும் 456 கணக் கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையா ளர்களுக்கு ஒன்பது கட்டமாக இரண்டு நாள் பயிற்சி முகாம் ஏப்ரல் 22 முதல் மே 21ம் தேதி வரை இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடக் கிறது. துவக்க முகாமிற்கு தாசில்தார் கண்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முகாமில் சிவசுப்பிரமணியம், பழமலைநாதன், மலர்ச் செல்வன் உள் ளிட்ட ஏழு சிறப்பு ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்வது குறித்து பயிற்சியளித்தனர். விருத்தாசலம் ஆர். டி.ஓ., முருகேசன் பயிற்சி வகுப் பினை பார்வையிட் டார். இதில் வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணியம் உட்பட பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஐம்பது பேர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மங்களூர் எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற் பார்வையாளர் முருகேசன் செய்திருந்தார்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior