உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றம்

கடலூர்: 

                  கடலூரில் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி டிஜிட்டல் பேனர்களை போலீசார் நேற்று அகற்றினர். அரசியல் கட்சியினர்உள்ளிட்ட முக்கிய பிர முகர்கள் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்களை விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் வைக்க வேண்டும். விழா முடிந்து மூன்று நாட்கள் கழித்து அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், கடலூரில் முக்கிய சாலைகளில் அரசியல் கட்சிகள் முக்கிய பிரமுகர்களின் பேனர்கள் வைக்கப்பட்டு நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் துர்கா மற்றும் போலீசார் நேற்று கடலூர் பாரதி ரோடு, நெல்லிக்குப்பம் சாலைகளில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட பேனர்களை அகற்றினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior