உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

நீர்}மோர் பந்தலை திறந்த மாற்றுத் திறனாளிகள்

 கடலூர்:

              மாற்றுத் திறனாளிகள் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் திறந்தனர் மாற்றுத் திறனாளிகள் பலர் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் கடலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுஅளிக்க வருகிறார்கள். இவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைப்பதுகூட சிரமமாக உள்ளது. மற்றவர்களுக்கும் குடிநீர் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. கோரிக்கை மனு அளிக்க வரும் ஏழை எளிய மக்கள் பலர் விலைகொடுத்து குடிநீர் வாங்கும் நிலையில் இல்லை. எனவே கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கத் தலைவர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிலர் சேர்ந்து, தங்கள் சொந்த செலவில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை நீர் மோர் பந்தல் திறந்தனர். நீர் மோர் பந்தலை கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு திறந்து வைத்தார். இதனை முன்மாதிரியாக் கொண்டு, மேலும் பலர் இத்தகைய நீர் மோர் பந்தலை மக்களுக்காகத் திறக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் கேட்டுக் கொண்டனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior