உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

ஆசிரியர் பயிற்றுனர்களின் பணி விதிகளை வரையறுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


கடலூர்: 

                ஆசிரியர் பயிற்றுனர்களின் பணி விதிகளை வரையறுக்கக் கோரி தமிழ்நாடு அனைத்து வள மைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 500 ஆசிரியர் பயிற்றுனர் களை பட்டதாரி ஆசிரியர்களின் கலந்தாய்விற்கு முன் பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம் மற்றும் வட்டார வளமையங்களில் நடக்கும் பயிற்சிகளில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஈடு செய்யும் வகையில் விடுப்பு அல்லது பண பலன் வழங்க வேண்டும். ஆசிரியர் பயிற்றுனர்களின் பணிவிதிகள் வரையறுக்கப்பட வேண்டும் உட் பட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கடலூரில் (எஸ்.எஸ்.ஏ.,) மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior