உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 21, 2010

சத்துணவு ஊழியர்கள் மனிதச்சங்கிலி

 கடலூர்:

            தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கடலூரில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.  "25 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணியாற்றிவரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனிதச்சங்கிலி போராட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ராமநாதன் சிறப்புரை ஆற்றினார். மாவட்டச் செயலாளர் அன்பழகன் விளக்க உரை நிகழ்த்தினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், செயலாளர் பாலசுப்பிரமணியன், வங்கி ஊழியர்கள் சங்க மாநில துணைத் தலைவர் மருதவாணன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர்.

பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior