உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

வாக​னங்​கள் வரி ஏய்ப்பு:​ அர​சுக்கு பல கோடி இழப்பு


புதுவை மாநி​லத்​தில் பதி​வு​செய்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் வாகன வரி செலுத்​தா​மல் இயக்​கப்​பட்​ட​தால் கடந்த 4 தினங்​க​ளில் கட​லூ​ரில் பிடி​பட்ட இரு
கட​லூர்:
 
                 கட​லூர்,​​ விழுப்​பு​ரம்,​​ நாகை,​​ திரு​வா​ருர்,​​ தஞ்சை மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​தோர் புதுவை மாநி​லத்​தில் வாக​னங்​களை வாங்கி,​​ தமி​ழ​கத்​தில் இயக்குவ​தால் தமி​ழக அர​சுக்கு பல கோடி இழப்பு ஏற்​ப​டு​கி​றது.​ க​ட​லூர் மாவட்டத்தில் இயக்​கப்​ப​டும் வாக​னங்​க​ளில் 30 சதம் வாக​னங்​கள்,​​ புதுவை மாநி​லத்தில் பதிவு செய்​யப்​பட்​டவை என்று,​​ போக்​கு​வ​ரத்​துத் துறை அதிகாரிகள் தெரி​விக்​கி​றார்​கள்.​ எனி​னும் தற்​போது இந்த எண்​ணிக்கை 50 சத​மாக உயர்ந்து விட்​டது.​ இதே போல் விழுப்​பு​ரம்,​​ நாகை,​​ திரு​வா​ரூர்,​​ தஞ்சை மாவட்​டங்​க​ளில் இயக்​கப்​ப​டும் வாக​னங்​க​ளில் 30 சதத்​துக்கு மேல் புதுவை மாநி​லத்​தில் பதிவு செய்​யப்​பட்​டவை என்று போக்​கு​வ​ரத்​துத் துறை அதிகாரிகள் தெரி​விக்​கி​றார்​கள்.​ ​மோட் டார் வாக​னங்​களை எந்த மாநி​லத்​தி​லும் வாங்குவ​தற்கு மக்​க​ளுக்கு உரிமை இருக்​கி​றது.​ ஆனால் அந்த வாக​னம் எந்த மாநி​லத்​தில் இயக்​கப்​ப​டு​கி​றதோ அந்த மாநி​லத்​துக்கு வாக​ன​வரி செலுத்த வேண்​டும் என்​பது விதி.​  
 
                      புதுவை மாநி​லத்​தில் மக்​கள் தொகை அடிப்​ப​டை​யில் பார்த்​தால்,​​ அந்த மாநி​லத்​தின் வாங்​கும் திற​னை​விட,​​ 5 மடங்கு அதி​கப்​ப​டி​யான வாக​னங்​கள் விற்​பனை ஆகின்​றன என்று போக்​கு​வ​ரத்​துத் துறை அதி​கா​ரி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ கட​லூர் உள்​ளிட்ட மேற்​கண்ட 5 மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​த​வர்​க​ளும்,​​ புதுவை மாநி​லத்​தில் வாக​னங்​களை வாங்​கு​வதே இதற்​குக் கார​ணம்.​ ​த​மி​ழ​கத்தில் வாக​னங்​க​ளுக்​கான விற்​பனை வரி கடந்த ஆண்டு 8 சத​மாக இருந்​தது.​ ஆனால் புது​வை​யில் 4 சதம்​தான்.​ இந்த ஆண்டு நிதி​நிலை அறிக்​கை​யில் வாகன விற்​பனை வரி மேலும் உயர்த்​தப்​பட்டு இருக்​கி​றது.​ ரூ.10 லட்​சத்​துக்​குக் கீழ் உள்ள வாக​னங்​க​ளுக்கு விற்​பனை வரி 10 சத​மா​க​வும் அதற்​கு​மேல் மதிப்​புள்ள வாக​னங்​க​ளுக்கு விற்​பனை வரி,​​ 15 சத​மா​க​வும் உயர்த்​தப்​பட்டு உள்​ளது.​ இத​னால் மேற்​கண்ட 5 மாவட்​டங்​கள் மட்​டு​மல்ல மேலும் பல மாவட்​டங்​க​ளைச் சேர்ந்​தோர் வாக​னங்​களை வாங்க புதுவை மாநி​லத்​துக்கு விரைந்​தோ​டும் வாய்ப்பு அதி​க​ரித்து இருக்​கி​றது.​சாலை வரி ​
 
                       மே​லும் சாலை​வரி தமி​ழ​கத்​தில் வாகன மதிப்​பில் 8 சதம்.​ ஆனால் புதுவை மாநி​லத்​தில் ஒட்​டு​மொத்​த​மாக இரு சக்​கர வாக​னங்​க​ளுக்கு ரூ.900 தான்.​ 4 சக்​கர வாக​னங்​க​ளுக்கு புதுவை மாநி​லத்தை விட,​​ தமி​ழ​கத்​தில் ஒரு வாக​னத்​துக்கு ரூ.25 ஆயி​ரத்​துக்கு மேல் கூடு​த​லாக வரி செலுத்த வேண்​டும்.​ இந்த மிகப்​பெ​ரிய வித்​தி​யா​சம் கார​ண​மா​கவே தமி​ழ​கத்​தைச் சேர்ந்த பலர் புதுவை மாநி​லத்​துக்​குச் செல்​கி​றார்​கள்.​ ​÷த​மி​ழ​கத்​தைச் சேர்ந்த பலர்,​​ புதுவை மாநி​லத்​தில் போலி​யான முக​வரி அளித்து வாக​னங்​களை வாங்​கு​கி​றார்​கள்.​ புதுவை மாநில வாகன டீலர்​கள் இதற்கு முழு ஒத்​து​ழைப்பு அளிக்​கி​றார்​கள்.​ அந்த வாக​னங்​கள் தமி​ழ​கத்​தில் இயக்​கப்​ப​டும்​போது,​​ போலீஸ் மற்​றும் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர்​க​ளி​டம் சிக்​கி​னால்,​​ நான் புது​வை​யைச் சேர்ந்​த​வன்,​​ முக்​கிய வேலை​யாக கட​லூர் வந்து போகி​றேன் என்று சொல்லி தப்​பித்து விடு​கி​றார்​கள்.​ ​பு​துவை பதிவு வாக​னங்​கள் விபத்​துக்​க​ளில் சிக்​கும்​போது,​​ முக​வ​ரியை விசா​ரித்​தால்,​​ பல நேரங்​க​ளில் போலி​யாக இருப்​ப​தாக கட​லூர் போலீ​ஸôர் தெரி​விக்​கி​றார்​கள்.​ இத​னால் பாதிக்​கப்​பட்ட நபர்​கள் இன்​சூ​ரன்ஸ் இழப்​பீடு பெறு​வ​தி​லும் சிக்​கல் ஏற்​ப​டு​கி​றது.​ ​÷இந்​தி​யா​வில் உள்ள அனைத்து மாநி​லங்​க​ளுக்​கும் ஒரே மாதி​ரி​யான வரி​வி​திப்பு முறை என்று,​​ வாட் வரி​வி​திப்பு முறையை மத்​திய அரசு கொண்டு வந்​தது.​ ஆனால் அதைப் புதுவை மாநி​லம் மதிக்​கவே இல்லை.​ பல பொருள்​க​ளுக்கு தனது இஷ்​டப்​படி மிகக் குறைந்த வரியை விதித்​துக் கொண்​டது.​ 
 
                           இத​னால் பயன் அடை​வோர் பிற மாநில நுகர்​வோ​ரும்,​​ புதுவை மாநில வணி​கர்​க​ளும் மட்​டுமே.​ புதுவை அர​சின் கஜா​னா​வுக்​கும் பயன் இல்லை.​ புதுவை மாநில அர​சி​யல்​வா​தி​க​ளுக்கு இதில் கிடைக்​கும் ஆதா​யமே இந்த வரி​கு​றைப்​புக்கு முக்​கி​யக் ​ கார​ணம் என்று கூறப்​ப​டு​கி​றது.​ ​விற்​பனை வரி மற்​றும் சாலை​வரி குறைவு கார​ண​மாக,​​ புதுவை மாநி​லத்​துக்​குச் செல்​லும் தமி​ழக நுகர்​வோர் எண்​ணிக்கை,​​ இந்த ஆண்டு மேலும் அதி​க​ரிக்க வாய்ப்பு இருப்​ப​தாக,​​ கட​லூர் வணிக வரித்​துறை அதி​கா​ரி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​ இந்த வரி வித்​தி​யா​சம் கார​ண​மாக,​​ தமி​ழ​கத்​துக்கு ஆண்​டு​தோ​றும் ஏற்​ப​டும் இழப்பு ரூ.25 கோடிக்கு மேல் என்று,​​ 5 ஆண்​டு​க​ளுக்​கு​முன் கணக்​கி​டப்​பட்​டது.​ இந்த ஆண்டு இழப்பு மேலும் பன்​ம​டங்கு அதி​க​ரிக்​கும் என்று,​​ வணி​க​வரி மற்​றும் போக்​கு​வ​ரத்​துத் துறை அதி​கா​ரி​கள் தெரி​விக்​கி​றார்​கள்.​÷அ​ னைத்து மாநி​லங்​க​ளி​லும் ஒரே மாதி​ரி​யான வரிக் கொள்கை இருந்​தால் மட்​டுமே இப்​பி​ரச்​னைக்​குத் தீர்வு காண​மு​டி​யும்.​ இல்​லை​யேல் தமி​ழ​கம் தொடர்ந்து வரு​வாய் இழப்​பைச் சந்​திப்​ப​தைத் தவிர வேறு வழி​யில்லை என்​றும் அதி​கா​ரி​கள் கூறு​கின்​ற​னர்.​ ​ ​
 
                       பு​து​வை​ யில் பதிவு செய்​யப்​பட்டு,​​ கட​லூ​ரில் இயக்​கப்​ப​டும் இரு சக்​கர வாக​னங்​களை கடந்த சில நாள்​க​ளா​கச் சோத​னை​யிட்​ட​தன் மூலம்,​​ ரூ.7 லட்​சம் சாலை வரி வசூ​லிக்​கப்​பட்டு இருப்​ப​தாக,​​ கட​லூர் வட்​டா​ரப் போக்​கு​வ​ரத்து அலு​வ​லர் ஜெயக்​கு​மார் வெள்​ளிக்​கி​ழமை தெரி​வித்​தார்.​ இத்​து​டன் விற்​பனை வரி​யை​யும் சேர்த்து,​​ அந்​தத் தொகையை ஆண்டு முழு​வ​தற்​கும் 5 மாவட்​டங்​க​ளுக்​கும் பெருக்​கிப் பார்க்​கும் போது,​​ தமி​ழ​கத்​துக்கு ஏற்​ப​டும் வரு​வாய் இழப்பு எத்​தனை கோடி என்​பதை தமி​ழக அரசு எண்​ணிப் பார்க்க வேண்​டும் என்​கி​றார்​கள் பொது​மக்​கள்.​

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior