உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம்

சிதம்பரம் : 

                    சிதம்பரம் பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நேற்று முதல் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. அரசு பள்ளிகளில் ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை (பிளஸ்1 நீங்கலாக) இலவச பாட புத்தகங்களை நேற்று (10ம் தேதி) முதல் வழங்க கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்தார். அதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு பள்ளிக்கும் தபால் மூலம் பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை தேர்வு முடிகள் வெளியிடப்பட்டதையடுத்து நேற்று பாட புத்தகங்கள் வழங்கும் பணி துவங்கியது. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior