உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 11, 2010

நெய்வேலி ஊராட்​சி​யில் கிடப்​பில் கிடக்கும் பிர​தம மந்​திரி கிராம சாலை

ஜல்​லி​கள் குவித்து வைக்​கப்​பட்​டுள்ள மேல்​பாப்​ப​னப்​பட்டு சாலை.
நெய்வேலி:

                    நெய்வேலி ஊராட்​சி​யில் செயல்​ப​டுத்​தப்​பட்ட பிர​தம மந்​திரி கிராம சாலைத் திட்​டம் ஒப்​பந்த காலம் முடிந்த நிலை​யில் சாலைப் பணி​கள் முழுமைய​டை​யா​மல் கிடப்​பில் போடப்​பட்​டுள்​ளது.​ நெய்வேலி ஊராட்சி கம்மா​பு​ரம் ஒன்​றி​யத்​தில் உள்​ளது.​  நெய்வேலி ஊராட்​சி​யில் இருந்து மேல்பாப்ப​னப்​பட்டு கிரா​மம் வரை பிர​தம மந்​தி​ரி​யின் கிராம சாலைத் திட்​டத்​தின் கீழ் ரூ.51.71 லட்சம் செல​வில் 1.7 கி.மீ நீள​முள்ள கான்​கி​ரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்​டது.​ இ​தற்​கான ஒப்​பந்​தம் கோரப்​பட்​ட​தை​ய​டுத்து,​​ முத​னைக் கிரா​மத்​தைச் சேர்ந்த கன்ஸ்ட்​ரக்​ஸன்ஸ் நிறு​வ​னம் ஒன்று ஒப்​பந்​த​தா​ர​ராக நியமனம் செய்​யப்​பட்​டது.​ இச்​சாலை 27.05.09 முதல் 23.03.10 தேதிக்​குள் முடிக்​கப்​பட வேண்​டும் என​வும் காலக்​கெ​டு​வும் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.​ஆனால் சாலை அமைக்​கும் பணி​கள் கடந்த நவம்​பர் மாதம் தொடங்​கப்​பட்டு தற்​போது கிடப்​பில் போடப்​பட்​டுள்​ள​தால் அச்​சா​லையை பொது​மக்​கள் பயன்​ப​டுத்த முடி​யாத நிலை உரு​வா​கி​யுள்​ளது.​ சாலை அமைப்​ப​தற்​கான கருங்​கல் ஜல்லி கொட்​டப்​பட்டு 5 மாதங்​க​ளா​கி​யும் இது​வரை ஜல்லி நிரப்​பப்​ப​டா​மல் உள்​ளது.​ மேலும் சாலை​யின் துவக்​கத்தி​லி​ருந்து 300 மீட்​டர் வரையே சாலைப் பணி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன.​ எஞ்​சிய சாலைப் பகு​தி​யில் ஒப்​பந்​தத்​தில் குறிப்​பிட்​டுள்ள படி கப்​பியோ,​​ ஜல்​லியோ இது​வரை போடப்​ப​ட​வில்லை.​ ஆனால் சாலை முடி​வ​டை​யும் பகு​தி​யில் 200 மீ நீளத்​துக்கு கப்​பி​கள் கொட்டப்பட்டுள்ளன.​ மே​லும் சாலை அமைப்​ப​தற்​கான ஒப்​பந்த காலம் முடி​வ​டைந்த பின்​ன​ரும் இது​வரை சாலைப் பணி​கள் நிறை​வ​டை​ய​வில்லை.​

இது குறித்து ஒப்​பந்த நிறு​வன உரி​மை​யா​ளர் கிருஷ்​ண​கு​மார் கூறுகையில்,​​ 

                  "நாளையே பணி​கள் தொடங்​கி​வி​டும்" என்​றார்.​ ஆனால் இது​வரை அதற்​கான அறி​கு​றி​கள் தென்​ப​ட​வில்லை.​

இ​து​கு​றித்து அப்​ப​குதி மக்​கள் கூறு​கை​யில்,​​ 

                  "கான்​கி​ரீட் சாலை அமைக்​கி​றேன் என்று கூறி​விட்டு,​​ ஒழுங்​காக இருந்த சாலையில் வெறும் கப்​பி​யை​யும் செம்​மண்​ணை​யும் கொட்டி,​​ புழுதி பறக்​கச் செய்திருக்கிறார்​கள்.​ இ​த​னால் வீடு முழு​வ​தும் செம்​மண் புழு​தி​தான் படர்ந்​துள்​ளது.​ துணி​யைக் கூட உலர வைக்க முடி​ய​வில்லை' என்​ற​னர்.​ கிடப்பில் உள்ள பிர​தம மந்​திரி கிராம சாலைத் திட்​டத்தை நிறை​வு​பெ​றச் செய்ய மாவட்ட ஆட்​சி​யர் உதவ வேண்​டும் என அப்​ப​குதி மக்​கள் எதிர்​பார்க்​கின்​ற​னர்.​


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior