உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் யார்? 12 நாள் குழப்பம் தீர்ந்தது

விருத்தாசலம் : 

                   விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்ற குழப்பத்திற்கு நேற்று தீர்வு காணப்பட்டது.க டலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாசம். இதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் முருகேசன். இவர் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுடன் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளிக்கு மாறுதலானார்.

                     இந்நிலையில், கடந்த 3ம் தேதி பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவுடன் தனக்கு மனமொத்த மாறுதல் வந்துள்ளது என, விருத்தாசலம் பள்ளிக்கு சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட முயன்றார். தனக்கு எந்த தகவலும் இல்லை எனக் கூறி பிரகாசம் வருகைப் பதிவேட்டை மறைத்து வைத்தார். மறுநாளும் இதே பிரச்னை நீடித்ததால் யார் தலைமை ஆசிரியர் என, குழப்பம் நீடித்தது.

                 இது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இருவருக்கும் கல்வித்துறை முறையாக இடமாறுதலுக்கான உத்தரவு வழங்கப் பட்டதையடுத்து நேற்று காலை விருத்தாசலம் பள்ளி தலைமை ஆசிரியராக முருகேசன் பொறுப் பேற்றார். மருத்துவ விடுப்பில் சென்றுள்ள தலைமை ஆசிரியர் பிரகாசத்திற்கு இடமாறுதல் உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior