உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

ஒரே இரவில் 2 வீடுகளில் திருட்டு:மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

கடலூர் : 

                          கடலூர் அருகே ஒரே இரவில் இரண்டு வீடுகளில் 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர் களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் அடுத்த குட்டியாங்குப்பம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரபாகரன் (36). இவரது மனைவி சுதா நேற்று முன் தினம் இரவு வீட்டின் வராண்டாவில் படுத்திருந்தார். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஏழரை சவரன் தாலிச் செயினை பறித்துச் சென்றனர்.

                     சற்று நேரத்தில் அதே தெருவைச் சேர்ந்த ராஜாராமன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், பீரோவில் இருந்த வளையல், செயின், மோதிரம் உள்ளிட்ட 78 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 6 சவரன் நகைகளை திருடிச் சென்றனர். இரு சம்பவங்கள் குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர். ஒரே இரவில் இரண்டு வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் குட்டியாங்குப்பம் கிராம மக்களை அச்சமடையச் செய்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior