உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

கேமரூனை வென்றது ஜப்பான் (1-0)


புளோயம்பாண்டீன்:
 
           உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் (1-0) கேமரூனை வென்றது.இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினாலும் முதல் 35 நிமிடங்கள் வரை இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்காது என்று ரசிகர்கள் நினைத்திருந்தபோது ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஜப்பானின் கெய்சுகே ஹோண்டா கோல் அடித்து ஜப்பானுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. கோலடிக்க எடுத்த முயற்சியில் 72-வது நிமிடத்தில் கேமரூனின் நிக்கோலஸýம், 90-வது நிமிடத்தில் ஜப்பானின் யூகியும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior