உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

கடலூர் - விருத்தாசலம் சாலை போக்குவரத்து மாற்றம்

கடலூர் : 

                     கடலூர் - விருத்தாசலம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் மாற்றுப் பாதையில் செல்ல கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

                     கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங் குப்பம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்து விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செல்லும் நகர பஸ்கள், மினி பஸ்கள் கடலூர் - விருத்தாசலம் சாலையில் வலதுபுறமாக பிரிந்து சின்னகாரைக்காடு ஊர் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் அடைந்து இடது புறமாக திரும்பி கடலூருக்கு செல்ல வேண்டும்.

                         கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக பிரிந்து சின்னகாரைக்காடு வழியாக கடலூர் - விருத்தாசலம் சாலையை அடைந்து இடது புறமாக திரும்பி விருத்தாசலம் செல்ல வேண்டும்.கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் தொலைதூர பஸ்கள், கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் வலது புறமாக (ஆலப்பாக்கம்) பிரிந்து கடலூர் - விருத்தாசலம் சாலையில் (குள்ளஞ்சாவடி) அடைந்து இடது புறமாக திரும்பி விருத்தாசலத்திற்கு செல்ல வேண்டும்.

                      விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு செல்லும் தொலைதூர பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் கடலூர் - விருத்தாசலம் சாலையில் (குள்ளஞ்சாவடி) வலது புறமாக பிரிந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்து கடலூர் செல்ல வேண்டும்.பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் இப்பால கட்டுமான காலமாகிய 18 மாதங்களுக்கு இந்த மாற்றுப்பாதையை பயன்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior