உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

அம்பேத்கர் சிலை அவமதிப்பு:சிதம்பரம் அருகே மறியல்

சிதம்பரம் : 

                       சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததை கண்டித்து மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் நிலவியது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குயவன்பேட்டையில் ஆறடி உயரமுள்ள பீடத்தில் இரண்டரை அடி உயரம் கொண்ட மார்பளவு அம்பேத்கர் சிலைக்கு நேற்று முன்தினம் இரவு விஷமிகள் செருப்பு மலை போட்டு அவமதித்திருந்தினர். அதிகாலையில் இத்தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலை மீது போடப்பட்டிருந்த செருப்பு மாலையை போலீசார் அகற்றினர்.

                       இந்நிலையில் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட செயலர் பால அறவாழி, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணை பொதுச் செயலர் காமராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி சிவபுரி - கவரப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் நிலவியது. தாசில்தார் காமராஜ், டி.எஸ்.பி., மூவேந்தன் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில், மறியலை கைவிட்டனர். மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குயவன்பேட்டை ஊர் தலைவர் எழிலன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior