உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

மனு கொடுத்த அரை மணி நேரத்தில் உதவி கலெக்டரின் அதிரடியால் மாணவர் மகிழ்ச்சி

கடலூர் : 

                      தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவருக்கு மனு கொடுத்த அரை மணி நேரத்தில் மடிப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் சீத்தாராமன் வழங்கினார். காட்டுமன்னார்கோவில் வட்டம் மதகளிர் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜகன்நாதன் மகன் வினோத் (12) ஏழாம் வகுப்பு மாணவர். இவர் தசை சிதைவு நோய் காரணமாக இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியால் அவதியடைந்து வந்தார்.

                   இந்நிலையில் நேற்று கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமனிடம் சக்கர நாற்காலி உதவி கேட்டு மனு கொடுத்தார். மனு மீது விசாரணை செய்த கலெக்டர் அரை மணி நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாணவர் வினோத்திற்கு மடி சக்கர நாற்காலியை வழங்கினார். மனு கொடுத்த உடன் சக்கர நாற்காலி கிடைத்ததால் மாணவரும் அவரது தாயாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior