உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

நடுவீரப்பட்டு : 

                  பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளியின் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியை மல்லிகா துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் சி.என்.பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், முத்துராமலிங்கம், ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior