உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

நடுவீரப்பட்டு உயர்மட்ட பாலம் நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., ஆய்வு

நடுவீரப்பட்டு :

                    நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு - சி.என்.பாளையம் இடையே உள்ள நரியன் ஓடையில் கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைதுறை சார்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.,சபா ராஜேந்திரன் பார்வையிட்டார். அப்போது அவரிடம் பாலத்திற்கான இணைப்பு சாலை போட்டு உடனடியாக பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தின் அருகில் நடுவீரப்பட்டு பகுதியில் ஹைமாஸ் விளக்கு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

                      அண்ணா கிராம முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், ஒன்றிய கவுன்சிலர் கந்தசாமி, ஊராட்சி துணை தலைவர் ராஜமாணிக்கம், நடுப்பேட்டை கிளை செயலாளர் நடராஜன், சி.என்.பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், அப்துல் அஜிஸ் உட்பட பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior