உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

மயூரா ஆற்றின் மணல் குவாரியை ரத்து செய்ய கலெக்டரிடம் மனு


கடலூர் : 

                  விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் அனுமதி வழங்கிய மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தள்ளனர். 

மனுவின் விவரம் வருமாறு:

                        விருத்தாசலம் அடுத்த நகர் கிராமத்தில் 4,000க்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு தேவையான குடிநீர் மயூரா ஆற்றிலிருந்து போர்வெல் மூலம் வழங்கப்படுகிறது. இருந்தும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக் குறை ஏற்படுகிறது. இந்நிலையில் கடந் தாண்டு மயூரா ஆற்றில் லாரி மூலம் மணல் எடுப்பதை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று மணல் குவாரி ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மணல் எடுத்து செல்கின்றன. இதனால் நிலத்தடி நீர் குறைகிறது. மேலும் அருகில் உள்ள நிலங்கள் மழைக் காலத் தில் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அருகில் உள்ள நல்லூர் அரசு பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் லாரியின் மூலம் மணல் எடுக்கும் குவாரியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior