உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

பண்ருட்டியில் போக்குவரத்து பாதிப்பு ஒரு கி.மீ., தூரம் கடக்க 15 நிமிடம்

பண்ருட்டி : 

               பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் நேற்று அதிக வாகனங்கள் வரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பண்ருட்டி கடலூர்-சித்தூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிகளவில் நேற்று வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்ஸ் பெக்டர் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து போலீசாரும் கோவை செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். பணியில் இருந்த ஒரே போலீஸ்காரரால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் திண்டாடினார். இதனால் தட்டாஞ்சாவடியில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரையிலான ஒரு கிலோ மீட்டரை கடக்க 15 நிமிடங்கள் வரை ஆனது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior