உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

மது கடத்தி வந்த சுமோ; கார் மீது மோதல் கடலூர் டாக்டர் உட்பட 4 பேர் படுகாயம்



                 மது பாட்டில்கள் கடத்தி வந்த டாடா சுமோ கார் எதிரே வந்த கார் மீது மோதியதில் டாக்டர் குடும்பத்தினர் நான்கு பேர் படுகாயமடைந்தனர். கடலூர் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ்(41). இவர் தனது உறவினர்களான கடலூர் அரசு மருத் துவமனை டாக்டர் ரவியின் மனைவி உஷா(45), கடலூர் மோகன் மனைவி ராஜராஜேஸ்வரி(45), கிஷோர்(21) ஆகியோருடன் ஆல்டோ காரில் காஞ்சிபுரத்திலிருந்து நேற்று மதியம் கடலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

                           மதியம் 3.45 மணிக்கு திண்டிவனம்-புதுச்சேரி ரோட்டில் எடையன்குளம் கிராமம் அருகே நான்கு வழி சாலை பணிகள் நடந்து வருவதால் சாலையின் ஒரு புறம் மட்டுமே வாகனங் கள் சென்றுக் கொண்டிருந் தன. அப்போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த டாடா சுமோ கார் ஒன்று டாக்டரின் கார் மீது மோதியது. இந்த டாடா சுமோ காரில் அதிகளவில் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைத்திருந்த பீர், பிராந்தி பாட்டில்கள் திடீரென வெடித்தன. இதனால் டாக்டர் ரமேஷ் உட்பட காரில் வந்த 4 பேரும் படுகாயமடைந்தனர். டாடா சுமோ காரில் வந்த இருவர் தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த 4 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior