உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

சிதம்பரம் ராணி சீதை ஆச்சி பள்ளிக்குழு செயலருக்கு பாராட்டு விழா

சிதம்பரம், : 

                அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து கொடுத்தமைக்காக பள்ளிக் குழு செயலருக்கு பாராட்டு விழா நடந்தது.

                    அண்ணாமலை நகர் ராணி சீதை ஆச்சி பள்ளிக் குழு செயலர் மற்றும் அண்ணாமலை பல்கலை பதிவாளர் ரத்தினசபாபதி, இவர் பள்ளியில் வகுப்பறைகள், தனித்தனியே ஆய்வக கூடங்கள், விளையாட்டு மைதானம் சுற்றுச் சுவர் மற்றும் நடைபாதை அமைத்து கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்துள்ளார். இதற்காக அலுவலர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் தர்பாரண்யன் தலைமை தாங்கி னார். அலுவலர் கழக செயலர் அன்புராஜா, உதவி தலைமை ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 88 சதவீதம் தேர்ச்சி பெற்றமைக்காக ஆசிரியர்கள், அலுவலர்களை பாராட்டி ரத்தினசபாபதி நினைவு பரிசு வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior