உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

நெய்வேலி அருகே சாலை விபத்துகளில் இருவர் பலி

கடலூர் : 

               நெய்வேலி அருகே இரண்டு சாலை விபத்துகளில் என்.எல்.சி., தொழிலாளர் உள்பட இருவர் இறந்தனர். நெய்வேலி தர்மல் 28வது வட்டம் இரண்டாவது மெயின் தெருவைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் பாலமுருகேசன்(33). இவர் டி.எஸ்.,இரண்டு பாப்லர் சொசையிட்டியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முதல் ஷிப்ட் முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தர்மல் 1லிருந்து இரண்டிற்கு செல்லும் ரோட்டில் எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் என்.எல்.சி., அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.

               இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி தர்மல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதே போன்று வடலூர் அடுத்த செங்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள் (70). இவர் நேற்று காலை 11 மணியளவில் வீணங்கேணி பஸ் நிறுத்தம் அருகே ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த வேன் மோதியதில் படுகாயமடைந்தார். உடன் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior