உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

குறிஞ்சிப்பாடி மருத்துவமனை சீர்கேட்டை கண்டித்து வடலூரில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி:

                 குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேட்டினை கண்டித்து அ.தி.மு.க.,வினர் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

             குறிஞ்சிப்பாடி தாலுகா மருத்துவமனை மற்றும் வடலூர் பேரூராட்சி சுகாதார சீர்கேடு, பேரூராட்சி ன்றியங்களில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததைக் கண்டித்து அ.தி.மு.க., சார்பில் வடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் செம்மலை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். வடலூர் பேரூராட்சி செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். ம.தி.மு.க., ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ராமலிங்கம், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் திராவிட அரசு, தண்டபாணி, நமச்சிவாயம், ராமலிங்கம், செல்வராணி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துக் கொண்டனர். அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., தங்கராசு, சிவசுப்ரமணியம், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராமலிங்கம், சட்டமன்ற தொகுதி செயலாளர் வெங்கடாஜலபதி, குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ரஜினி, அம்பு, முத்துலிங்கம், பொது குழு உறுப்பினர் காமராஜ், சவுந்தரராஜ், உதயராஜ், தொழில் சங்க மணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior