உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 25, 2010

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி இடம் ஆக்கிரமிப்பு: கலெக்டர் நேரில் பார்வை

விருத்தாசலம்:

                விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரிக்குச் சொந்தமாக 42 ஏக்கர் இடம் உள்ளது. 

                   இதில் ஒரு பகுதியில் மட்டுமே கல்லூரி இயங்கி வருகிறது. மற்ற பகுதிகள் முள் செடிகள் வளர்ந்துள்ளது. நாச்சியார் பேட்டைக்கு அருகில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் 30க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர். இந்நிலையில் கலெக்டர் சீத்தாராமன், ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில் தார் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சன்று அப்பகுதிகளை பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தினார். மேலும் அதிகாரிகளிடம் நடவடிக்கை மேற் கொள்ள உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior