உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

ரூ. 24 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டும் 6 மாதமாக தொடங்கவில்லை: விவசாயிகள் புகார்

கடலூர்:

               ரூ.24.20 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் கடலூர் மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

                  திட்டக்குடி வட்டம் தொழுதூரில் இருந்து விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி வரை பழுதான பழைய தார்ச் சாலையை அகலப்படுத்தி புதிய சாலை அமைக்க ரூ.24.20 கோடியில், நெடுஞ்சாலைத் துறையில் திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் பணி தொடங்கப்படவில்லை. பெண்ணாடம் சர்க்கரை ஆலை மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தும் இச்சாலை, மிகமோசமாகப் பழுதடைந்துள்ளது. விரைவில் பணி தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றும் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior