உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

கருவேப்பிலங்குறிச்சியில் கிராம மக்கள் சாலை மறியல்

விருத்தாசலம்:
 
               மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விருத்தாசலம் அருகே  கருவேப்பிலங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
                   விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் (29). இவரது மனைவி கலைச்செல்வியை பிரசவத்திற்காக கருவேப்பிலங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறிது நேரத்தில் கலைச்செல்விக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது. உரிய சிகிச்சை அளிக்காததே குழந்தை இறப்புக்கு காரணம் என்று கூறி, சத்தியவாடியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் ஜெயராமன் அவர்களிடம் பேச்சுநடத்தி கலைந்துபோகச் செய்தனர். இதனால் விருத்தாசலம், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior