உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

சிதம்பரத்தில் திருட்டை தடுக்க ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் : 

                 சிதம்பரத்தில் போலீஸ் சார்பில் அடகு கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து தொடரும் கொள்ளை சம் பவங்களால் கடலூர் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதையொட்டி சிதம்பரத்தில் அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு சிதம் பரம் போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். 

கூட்டத்தில் டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமை தாங்கி பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசுகையில், 

                 "திருட்டு சம்பவங்களை தடுக்க கடைகளை தரமான பூட்டு உபயோகிக்க வேண்டும், சந்தேகப்படும்படி யாராவது இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக லாக்கரில் வைக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் உங் களை நம்பிதான் நகைகளை அடமானம் வைக் கின்றனர். அவற்றை பாதுகாப்பதும் உங்கள் கடமை' என பேசினார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், அறிவானந்தம், சப் இன்ஸ் பெக்டர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior