உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

தேசிய மக்கள் கணக்கெடுப்பு பணியின்போது தவறான தகவல் கொடுத்தால் தண்டனை: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் : 

                 தேசிய மக்கள் விவர பதிவேடு கணக்கெடுப்பாளர்களிடம் தவறான தகவல் கூறுபவர்கள் தண்டனைக்குரியவர்கள் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

                தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. இந்த பணி அடுத்த மாதம் 15ம் தேதி வரை நடைபெறும். பின்னர் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி தொடங்கப்படும். 

இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் தெரிவிக்கையில் 

                  "கடலூர் மாவட்டத்தில் 6.45 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. கணக்கெடுக்கும் பணியில் 4,029 பணியாளர்களும், சூப்பர்வைசர்களும் ஈடுபட்டுள்ளனர். கணக் கெடுப்பின்போது 35 வினாக்கள் குறித்து விவரங்கள் கேட்கப்படும். பொதுமக்கள் கணக்கெடுப் பாளர்களிடம் சரியான விவரங் கள் கூறி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர் கள் படிவம், அதற்கான தோல்பை உள்ளதா என தெரிந்து கொண்டு விவரங்களை கூறவும். தவறான தகவல் கொடுப்பவர்கள் தண்டனைக்குரியவர்கள்' என கூறினார்.

சிதம்பரம்: 

                   சிதம்பரத்தில் நகர மன்ற தலைவர் பவுஜியா பேகம் வீட்டில் இருந்து நேற்று காலை 9 மணியளவில் கணக்கெடுப்பணி துவங்கியது. தலைமை கணக் கெடுப்பாளர் ஷேக் மைதீன் மேற்பார்வையில் 90 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், 15 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பின்போது தற்போது தேசிய பதிவேட்டிற் காக கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்பட்டது. குடும்ப தலைவர், உறுப்பினர்கள், உறவு முறை, வயது, தொழில், வருமானம், கல்வித்தகுதி, நிரந்தர முகவரி, தற்காலிக முகவரி மற்றும் கம்யூட்டர், இண்டர்நெட் உபயோகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் சேகரிக்கப்பட்டது.

விருத்தாசலம்: 

                 சேர்மன் முருகன் வீட்டில் கணக் கெடுக்கும் பணி துவங்கியது. ஆர்.டி.ஓ., முருகேசன், கமிஷனர் திருவண்ணாமலை, தாசில் தார் ஜெயராமன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், வி.ஏ.ஓ., ராஜேஸ்வரன், நகராட்சி மேலாளர் மரியதாஸ், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாளர் கல்யாணசுந்தரம், இளவரசு, கணக்கெடுப்பாளர் பிரேமலதா உட்பட பலர் பங்கேற்றனர்.

நெல்லிக்குப்பம்: 

                 சேர்மன் கெய்க்வாட்பாபு தலைமை தாங்கினார். ஆணையாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித் தார். மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஊழியர்களிடம் அதற்கான படிவங்களை எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் வழங்கி துவக்கி வைத்தார். மேலாளர் சிவசங்கரன், பழனிவேல், அங்கமுத்து, கவுன்சிலர்கள் விஜயகுமார், வீரமணி, தமிழ்மாறன் இன்ஜினியர் புவனேஸ்வரி, செந்தாமரைக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பண்ருட்டி: 

                சேர்மன் பச்சையப்பன் தலைமை தாங்கி கணக்கெடுப்பு புத்தகம் வழங்கினார். மேலாளர் ஜெயலட்சுமி வரவேற்றார்.கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர் கள் கையாள வேண்டிய முறைகள் குறித்தும் கமிஷனர் உமாமகேஸ்வரி விரிவாக பேசினார்.

ராமநத்தம்: 

             திட்டக்குடி தாலுகாவில் 150 குடியிருப்பு பகுதிகள் அல்லது 600 பேர் வசிக்கும் பகுதி (வட்டம்) என பிரிக்கப்பட்டுள்ளது. 395 வட்டங்களில் கணக்கெடுக்க 62 மேற்பார்வையாளர்களையும், 390 கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior