உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம்


சிறுபாக்கம் : 

                       மங்களூர் ஒன்றிய வேளாண்மை ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம், வேளாண் வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மைக்குழு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை அலுவலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகளின் பயன்பாடு, மானியம், திட்ட விளக்க பயிற்சிகள், விவசாயிகள் சுற்றுலா சென்று கண்டு உயர்வு திட்டம், வயல்தின விழா நடத்துதல், வேளாண் துறை மூலம் பயிர்களுக்கு அளிக்கப்படும் மானிய உதவி திட்டங்கள், அபிவிருத்தி திட்டப்பணிகள், தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட பயன் கள் குறித்து கலந்துரையாடல் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மைக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சேகர், பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், ராமதாஸ், ராஜி, தாமோதரன், மருதமுத்து, பொன்முடி, வேளாண் அலுவலர் டென்சிங், கால் நடை மருத்துவ அலுவலர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior