உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல், எள் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி : 

                பண்ருட்டி பகுதியில் நெல் அறுவடை சீசன் என்பதால் மார்க்கெட் கமிட்டியில் கடந்த வாரத்தை விட நெல், எள் வரத்து அதிகரித்தது. பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் கடந்த வாரம் ஏ.டி.டி.,36 ரகம் தினமும் 500 மூட்டைகள் அளவிலும், 50 மூட்டை அளவிலும் விற்பனைக்கு வந்தது. நேற்று முன்தினம் ஏ.டி.டி., 36 ரகம் 1,200 மூட்டைகளும், எள் 100 மூட்டைகளும் வரத்து வந்தது. நேற்று 500 மூட்டைகளும், எள் 50 மூட்டைகளும், உளுந்து 40 மூட்டைகளும், ராகி 20 மூட்டைகளும், மணிலா 20 மூட்டைகளும், திணை, கம்பு ஆகியவை விற்பனைக்கு வந்தது.75 கிலோ எடைகொண்ட நெல் மூட்டை 726 ரூபாயும், 80 கிலோ எள் மூட்டை 3,209 ரூபாயும், பருத்தி 100 கிலோ 3,050 ரூபாயும், 100 கிலோ உளுந்து 5,949 ரூபாயும், கம்பு 1,431 ரூபாயும், ராகி 1,183 ரூபாயும், தினை 1,679 ரூபாயும் விற்பனையானது. நெல் அறுவடை சீசன் என்பதால் இன்னும் 20 நாட்கள் நெல் வரத்து அதிகரித்து காணப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior