உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

மங்கலம்பேட்டையில் அடிக்கடி மின் வெட்டு ஆவேசத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் : 

                 அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அறிவிப்பின்றி இரவு நேரங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 6 மணிக்கு வழக்கம் போல் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர் பகல் 1 மணிக்கு முன்னறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

                  ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 200 பேர் விருத்தாசலம்-உளுந்தூர் பேட்டை சாலையில் மங்கலம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் கழித்து கண்டியாங்குப்பம் உதவி மின் பொறியாளர் இளங்கோவன், மண்டல துணை தாசில்தார் மெகருன்னிசா மற்றும் மங்கலம்பேட்டை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், தினசரி 3 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படும். பிற நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதாக உறுதியளித்தனர். அதனையேற்று மறியல் கைவிடப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior