உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி

கடலூர் : 

                கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக எந்தவித முன்னறிவிப்பின்றி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மிழகத்தில் காற் றாலை, அனல், நீர் மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கோடையில் நீர்தேக்கத்தில் தண்ணீர் வற்றிவிட்டதால் நீர் மின் உற்பத்தி குறைந்தது. இதனை ஈடு செய்வதற்காக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக மின் வெட்டு அமல் படுத்தப்பட்டது. ஏற்கனவே 2 மணி நேரமாக இருந்த மின்வெட்டு பின்னர் 3 மணி நேரமாக உயர்த் தப்பட்டது. "லைலா' புயலுக்குப் பின் காற்றாலை மூலம் எதிர்பார்த்த அளவுக்கு மின்சாரம் கிடைத்ததால் ஒரு வாரம் தடையில்லா மின்சாரம் வழங்கப் பட் டது.

                   இதைக்கண்ட பொதுமக்கள் நம்ப முடியாமல் இந்த மின்வெட்டை வேறு நேரத்தில் பிடித்தம் செய் வார்கள் என அஞ்சினர். இந்நிலையில் மின் வாரியம் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தற்போது காற் றாலை மின்சாரம் கைகொடுத்து வருவதால் கடலூர் மாவட்ட மக்களுக்கு 3 மணி நேரமாக இருந்த மின் தடை 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதனால்தான் என்னவோ, இந்த அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் மீண்டும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. நள்ளிரவு, பகல் என எந்த நேரமும் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என கூறமுடியவில்லை. நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 மின்வெட்டுக்கு காரணம் என்ன? 

இந்த மின்வெட்டு குறித்து மின்வாரிய கண் காணிப்பு பொறியாளர் ரவிராம் கூறியதாவது:

                       காற்றாலை மூலம் நமக்கு போதுமான அளவு மின்சாரம் கிடைத்ததால் மின்வெட்டு நேரத்தை குறைத்தோம். தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவ காற்றில் மழை தொடங்கியுள்ளதால் காற் றாலை மூலம் கிடைக்கும் மின்சாரம் திடீரென குறைந்தது. அதனால் வேறு வழியின்றி மின் தடை ஏற்படுகிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior