உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

விருத்தாசலத்தில் அரசு பஸ்சிற்கு கண்டக்டர் வராததால் பஸ் நிலையத்தில் பயணிகள் தவிப்பு

விருத்தாலசம் : 

                 விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்டக்டர் பணிக்கு வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.விருத்தாசலத்திலிருந்து எம்.பரூர் செல்லும் அரசு பஸ் தடம் எண் 23 (டி.என் 32 என் 1428) நேற்று காலை பஸ் நிலையத்திற்கு டிரைவர் ஓட்டி வந்து நிறுத்தினார். பயணிகள் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். நீண்ட நேரமாகியும் கண்டக்டர் வராததால் 11.30 மணிக்கு எடுக்க வேண்டிய பஸ் 12.30 மணி வரை எடுக்கவில்லை. இந்நிலையில் 12.30 மணிக்கு எடுக்க வேண்டிய அடுத்த பஸ் தடம் எண்-2 (டி.என் 32 என் 2071) பஸ் நிலையத்திற்கு வந்தது.

                முன் பஸ்சில் இருந்த பயணிகள் அடுத்த பஸ்சில் ஏறி அமர்ந்தனர். இந்த பஸ்சிற்கும் கண்டக்டர் வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இது குறித்து பஸ் நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக நேரக் காப்பக அலுவலகத்தில் இருந்தவர்களிடம் கேட்டதற்கு, விருத்தாசலம் பணிமனையில் பணிபுரியும் இரண்டு கண்டக்டர்களுக்கு இன்று (நேற்று) திருமணம் நடந்தது. இதனால் அனைவரும் கல்யாணத்திற்கு சென்றதால் கண்டக்டர் பற்றாக் குறை ஏற்பட்டுள் ளதாக கூறினார். அதன்பிறகு வேறு பஸ்சில் பணி செய்ய வந்த கண்டக்டரை மாற்றி, ஒரு மணிக்கு எம்.பரூர் பஸ் இயக்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior