உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

கடலூர் மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் பிறந்த நாள் விழா

கடலூர் : 

                  தமிழக முதல்வரின் 87வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க., சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நெய்வேலி:

                  நகர தி.மு.க., சார்பில் நகர செயலாளர் புகழேந்தி தலைமையில் கொடியேற் றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பிளாக்-19ல் உள்ள டேனிஷ்மிஷன் பள்ளி மற்றும் தாய் தொண்டு மையத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு சீருடை மற்றும் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர தலைவர் சிவந்தான்செட்டி, ஆண்டகுருநாதன், தொ.மு.ச. நிர்வாகிகள் வீரராமச்சந்திரன், கோபாலன் பங்கேற்றனர்.

சிதம்பரம்: 

                கோவிலாம்பூண்டியில் நடந்த விழாவிற்கு சபாபதி தலைமை தாங்கினார். லட்சுமிபதி, பத்மநாபன், ராஜா முன் னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் பாஸ்கர், வெங்கடேசன், பால்ராஜ், புருஷோத்தமன் பங்கேற்றனர். 

கடலூர்: 

                  அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடந்த விழாவிற்கு தொ.மு.ச., தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். ஆனந்தன் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் வீரப்பன் சங்க கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பணிமனை செயலாளர் பார்த்தசாரதி, புண்ணியமூர்த்தி, வெற்றிவேல், செல்வபாண்டு பங்கேற்றனர்.

விருத்தாசலம்: 

                நகர செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி கொடியேற்றினார். அவைத் தலைவர் அபுபக்கர் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராமு, அன்பழகன், வாசு சுந்தரேசன், பாலகிருஷ் ணன், கர்ணன் உட்பட பலர் பங் கேற்றனர்.

திட்டக்குடி: 

                    பேரூர் செயலாளர் பரமகுரு தலைமை தாங்கினார். நகர தலைவர் தங்கமணி, பொரு ளாளர் கோவிந்தராஜ்,சுரேஷ், ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுமுளை காலனியில் கிளை செயலாளர் பெருமாள் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

வடலூர்: 

                வள்ளலார் நிறுவிய சத்திய தருமச் சாலையில் நடந்த சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஒன்றிய கல்விக்குழு தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம், அறங்காவலர்கள் விஜயகுமார், ராமகிருஷ் ணன், கனகலட்சுமி, வேல் ராமலிங்கம், செயல் அலுவலர் நாகராஜன் கலந்துக் கொண்டனர்.

ஸ்ரீமுஷ்ணம்: 

                      நகர தி.மு.க., சார்பில் நடந்த விழாவில் பேரூராட்சி சேர்மன் செல்வி தலைமை தாங்கி கொடியேற்றி மரக்கன் றுகள் நட்டார். பூவராகசாமி, பேரூராட்சி துணை தலைவர் முருகானந்தம், சீனுவாசன், சுப்ரமணியன், அன்பழகன் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior