உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகராறு

கடலூர் : 

                   கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் சேர்மனின் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்த 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் இடிந்து விழுந்தது.புதிய அலுவலகம் கட் டுவதற்காக, பழைய கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதிலி ருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரத் தூண்கள், இரும்பு கம்பிகளை ஏலம் விட டெண்டர் நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                நேர்முக உதவியாளர் தர்மசிவம் (வளர்ச்சி) தலைமை தாங்கினார். பி.டி.ஓ., பத்மநாபன் முன்னிலை வகித்தார். டெண்டர் போடுவதில் ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க., வினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதற்குள் பிற்பகல் 3 மணியானதால் டெண்டர் பெட்டியை பி.டி.ஓ., அறைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய சேர்மனின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பி.டி.ஓ., விடம் வாக்குவாதம் செய் ததால் பரபரப்பு ஏற்பட்ட தால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior