உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

காவிரி பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

கடலூர் : 

                காவிரி பாசனப்பகுதி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பாதவது:

                  கடலூர் மாவட்டத்தில் காவிரி பாசனப் பகுதிகளில் அடங்கிய 56 வாய்க்கால்களை தூர்வார 2.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மூலம் நடைபெற்று வருகிறது. நேற்று வீராணம் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த பூதங்குடியில் கோதாவரி, மணவாய்க்கால், குணவாசல், எல்லேரி வாய்க்கால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தார். பின்னர் சிதம்பரத் தில் பல்வேறு பகுதி விவசாயிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

                        அப்போது மாவட்டத்தில் தற் போது 56 வடிகால் மற்றும் வாய்க் கால் தூர்வாரும் பணிகள் 2.50 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. 

தூர் வாரும் பணிகள் குறித்து விவசாயிகள் தங்களது ஆலோசனைகள் மற்றும் புகார்களை 

செயற்பொறியாளர் ஒதம்பரம் 944392948, 
உதவி செயற்பொறியாளர் அணைக்கரை 9842258499, 
உதவி செயற்பொறியாளர் சிதம்பரம் 9443650656, 
உதவி செயற்பொறியாளர் லால்பேட்டை 9442312589 

                          எண்களுக்கு தெரிவிக்கலாம். பணிகள் நடைபெறும் இடங்களில் பணியின் தன்மை, நிதி ஒதுக்கீடு, வேலை துவங்கிய நாள், முடிக்க உள்ள நாள் அடங்கிய பலகைகளை வைக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior