உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

              தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் சுமை தூக்கும் பணியாளர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டலத்தில் இயங்கி வரும் அனைத்து வட்ட செயல் முறைக்கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் போதிய சுமை தூக்கும் தொழிலாளர்கள் இல்லாததால் சுமை தூக்கும் தொழிலாளர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே அனுபவமும், தகுந்த உடல் திறனும் உள்ளவர் கள் இந்த பணிக்கு விண் ணப்பிக்கலாம். பொது வினியோக திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகளுக்கு உணவுப்பொருட்களை எடையிட்டு லாரிகளில் லோடுகள் ஏற்றவும், கிடங்குகளுக்கு வரும் லோடுகளை கிடங்கில் இறக்கி, அட்டியிடுவது செய்ய வேண்டிய பணிகளாகும்.

                     கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் மற்றும் நவீன அரிசி ஆலைகள் உள்ள நெய்வேலி, சிதம்பரம் பகுதிகளில் பணியாற்ற சுமை தூக்கும் தொழிலாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுள்ளவர்கள் இம்மாதம் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior