உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

மாஜி இன்ஸ்பெக்டர் மகன் கொலை வழக்கு: சரணடைந்தவர் பரபரப்பு வாக்குமூலம்


கடலூர்: 

                    தங்கை முறை பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொள்வேன் என கூறியதால், கோடீஸ்வரபாபுவை கொலை செய்தோம் என, உறவினர் பிரசன்னா, போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

                   கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தைச் சேர்ந்தவர் ராமன் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவரது மகன் சுகுமாறன் (எ) கோடீஸ்வரபாபு (26). தனது மகனை காணவில்லை என்று ராமன் கடந்த 1ம் தேதி  புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.  போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சுகுமாறனை கடத்திச் கொன்று திருச்சி காவிரி ஆற்றங்கரையில் வீசியதாக பச்சையாங்குப்பம் பிரகாஷ், பிரசன்னபாபு, வில்லியநல்லூர் ரவி ஆகியோர் புதுச்சத்திரம் வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்தனர்.  புதுநகர் போலீசார், சரணடைந்த மூவரையும் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பிரசன்னா கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு: 

                    தங்கை முறையான அறிவுக்கரசியை கடத்திச் சென்ற கோடீஸ்வரபாபுவை போலீசார் மீட்டு வந்து, சமரசம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றோம்.  அவரது தந்தை ராமன் மற்றும் குடும்பத்தினர் கண்டித்ததால், பிரச்னை ஏற்பட்டது. அதனால் நான் (பிரசன்னா), பிரகாஷ், எங்களது நண்பர் வில்லியநல்லூர் ரவி ஆகியோர் கோடீஸ்வர பாபுவை காரில் புதுச்சத்திரம் அடுத்த மடவப்பள்ளம் கிராமத்தில் உள்ள சவுக்கு தோப்பிற்கு அழைத்துச் சென்று அறிவுரை கூறினோம். அப்போது கோடீஸ்வரபாபு, அறிவுக்கரசி யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவளுடன் தொடர்பு வைத்துக் கொள்வேன் என கூறினார்.

                   ஆத்திரமடைந்த  நானும், ரவியும் கோடீஸ்வரபாபுவின் கழுத்தை இறுக்கி முகத்தில் குத்தியதும் மயங்கி விழுந்தார். பின், காரில் இருந்த நைலான் கயிற்றால் கழுத்தை நெரிந்து கொலை செய்தோம். அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை கல்லால் குத்தி சிதைத்தோம்.  பிரேதத்தை, நானும் ரவியும் காரில் எடுத்துக்சென்று திருச்சி அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை முட்புதரில் வீசிவிட்டு வந்தோம். இதற்கிடையே, கோடீஸ்வரபாபுவை காணவில்லை என அவரது தந்தை, போலீசில் புகார் கொடுத்ததை அறிந்து சரணடைந்தோம். இவ்வாறு வாக்குமூலத்தில் பிரசன்னா கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior