உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 04, 2010

போலி முத்திரைகள்: ஆட்சியர் எச்சரிக்கை

கடலூர்:

               அலுவலர்களின் அனுமதியின்றி அலுவல் முத்திரைகளைத் தயாரித்தால், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். 

கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

               டலூர் மாவட்டத்தில் அலுவல் சார்ந்த போலி முத்திரைகள் புழக்கத்தில் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இப்போலி முத்திரைகளால் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு, பலவிதமான இழப்புகளுக்கு ஆளாகிறார்கள். எனவே முத்திரை தயார் செய்பவர்கள், சம்மந்தப்பட்ட அலுவலர்களின் அனுமதி ஆணை பெற்ற பிறகே, முத்திரை தயாரித்து அளிக்க வேண்டும்.அலுவல் சாரா தனிநபர்களுக்கு, அலுவலக முத்திரைகளை எக்காரணம் கொண்டும் செய்து தரக் கூடாது. மீறினால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் சமூக விரோதிகளை அணுகி, போலி முத்திரையிட்ட சான்றுகளை பெற முயல வேண்டாம், ஊக்குவிக்கவும் வேண்டாம் என்றும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior