உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில்1030 பேருக்கு காஸ் அடுப்பு: எம்எல்ஏ வழங்கினார்

கடலூர்:

           மக்கள் கேட்காமலேயே நலத் திட்டங்களை அள்ளித் தந்தவர் முதல்வர் கருணாநிதி என்று, கடலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் பேசினார். கடலூரை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, வெள்ளிக்கிழமை நடந்தது. 

                பள்ளிப்பட்டு ஊராட்சியில் 550 பேருக்கும், அழகியநத்தம் கிராமத்தில் 480 பேருக்கும், இலவச காஸ் அடுப்புகளை அய்யப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார். பள்ளிப்பட்டு கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை அய்யப்பன் திறந்து வைத்தார். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.3 லட்சத்தில் கட்டப்பட்ட கிராம நூலகத்தையும் அவர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பத்மநாபன், வட்ட வழங்கல் அலுவலர் குமார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி, திமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior