உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

தகுதியான வாக்காளர்களை சேர்க்க கட்சியினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் வேண்டுகோள்

 கடலூர்: 

                வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர் களை சேர்ப்பதில் கட்சி நிர்வாகிகள் முழு கவனம் செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டுமென அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே., பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
 
              தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்லுக்காக , கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1ம் தேதி வெளியிட் டப்பட்டது. தொடர்ந்து 11 மற்றும் 12ம் தேதிகளில் அந்தந்த ஓட்டுச்சாவடியில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. முகாம்களில் ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள், முன்பு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக குடிவந்தவர்கள் தங்கள் பெயர்களை புதிய வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், இறந்தவர்கள் மற்றும் வேறு இடங்களுக்குச் சென்றவர்கள் பெயரை நீக்குவதற்கும் புகை படங்களை சரிபார்ப்பதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கட்சி அனைத்து நிர்வாகிகளும், தகுதியான வாக்காளர்களை சேர்ப்பதில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனைத்து நிர்வாகிகளும் இப்பணியில் ஈடுபட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior