உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப்படிப்பு விண்ணப்பங்கள் விற்பனை

கடலூர்: 

          எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
 
இது குறித்து கூட்டுறவு ஒன்றிய தனி அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

               பாரதியார் பல்கலைக் கழகத்துடன் அங்கமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் குறைந்த கட்டணத்தில் பி.காம்., - பி.பி.ஏ., - பி.சி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., ஆகிய இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டாக துவங்கப்படவுள்ளது. 

                        மேலும் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் மூலம் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் டி.சி.ஏ., - எம்.எஸ்.ஆபீஸ், டேலி 9.0 ஆகிய கம்ப்யூட்டர் பயிற்சிகளுக்கும் விண்ணப் பங்கள் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்புக்கான வகுப்புகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் மட்டுமே நடத்தப்படவுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior