உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

தனித்துப் போட்டியிடவும் தயார்: டாக்டர் அன்புமணி



                   சட்டப் பேரவைத் தேர்தலில் பென்னாகரம் ஃபார்முலாவை பின்பற்றவும் பாமக தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான டாக்டர் அன்புமணி தெரிவித்தார். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு  வழங்கப்பட்டது. 

கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: 

            கூட்டணி பற்றி தெரிந்து கொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள். பாமக இந்தப் பக்கமா, அந்தப் பக்கமா என்று பத்திரிகைகள் எழுதுகின்றன.கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். அதுகுறித்து ராமதாஸ் முடிவு செய்வார். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது.தேவைப்பட்டால் பென்னாகரம் ஃபார்முலாவைக் கூட பின்பற்ற தயாராக இருக்கிறோம். செல்வாக்குள்ள 80 தொகுதிகளை அடையாளம் கண்டு அதில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.கட்சியை பலப்படுத்துவதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதற்காக நாம் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பழைய நிர்வாகிகளும், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும். அப்படி பணிபுரிபவர்களுக்கு என் மூலமாகவோ, அன்புமணி மூலமாகவோ மீண்டும் பதவி கிடைக்கும்.பாமகவில் ஏராளமான இளைஞர்களை சேர்க்க வேண்டும். 
            
               பாமகவை இளைஞர்கள் கட்சியாக மாற்ற வேண்டும். அதற்காகவே இளைஞரணித் தலைவராக அன்புமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமூக நீதிக்காகவும், சுற்றுச்சூழலுக்காகவும் பாமகவைப் போல பாடுபட்ட கட்சி எதுவும் இல்லை. பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் நாங்கள் செய்துள்ள சாதனைகள் எண்ணற்றவை. பாமக ஒரு பசுமைக் கட்சியாகும்.பந்திக்காக அலைகிறோம் என்று நம்மைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். நாமும் பந்தி போடும் காலம் வரும்.பாமக தொண்டர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 10 மரக் கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். அதற்கான சான்றிதழை கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெற வேண்டும். நானும், அன்புமணியும் 10 மரக் கன்றுகளை நட்டு சான்றிதழ் பெறப் போகிறோம் என்றார் ராமதாஸ். பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு 40 ஆயிரம் வாக்குகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. அதுபோலவே 2011 சட்டப் பேரவைத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடவும் தயங்க மாட்டோம் என்பதை அன்புமணி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior