உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

பரங்கிப்பேட்டையில் முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் அபேஸ்

பரங்கிப்பேட்டை:

                பரங்கிப்பேட்டையில் முதியவரிடமிருந்து நூதன முறையில் 50 ஆயிரம் ரூபாயை அபகரித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

                 பரங்கிப்பேட்டை ஆரியநாட்டு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (70). இவர் நேற்று காலை இந்தியன் பாங்க்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் எடுத்து பையில் வைத்துக் கொண்டு பாங்க் அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம ஆசாமி ஒருவர் சக்கரபாணியின் சட்டையில் அசிங்கப்படுத்தினார். உடன் கைப்பையை கீழே வைத்து விட்டு பின் பக்கமாக துடைக்கும் போது மர்ம ஆசாமி பையை எடுத்துக் கொண்டு ஓடினார். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior