உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 10, 2010

பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

சிதம்பரம்:

            அரசு அறிவித்த பட்டதாரி ஆசிரியர்கள் 15 ஆயிரம் பேரை உடனே நியமிக்க கோரி  10ம் தேதி சென்னையில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து வேலை இல்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ரத்தினகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

               தமிழக அரசு 2008-09 ம் ஆண்டு கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்த 6500 பணியிடங்கள், 2009-10ம் ஆண்டிற்கு 6300 பணியிடங்கள், தரம் உயர்த்தப்பட்ட பள் ளிகளில் 1400 பணியிடங்கள் என 15 ஆயிரம் பேரை நியமிப்பதாக அறிவித்து காலம் கடத்தி வருகின்றனர். இதனால் வயது முதிர்ந்து பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களையும் ஒட்டு மொத்தமாக நியமனம் செய்ய வேண்டும். இடை நிலை ஆசிரியர்கள் பதவி உயர்வால் பாதிக்கப் பட்டுள்ள தமிழ், வரலாறு மற்றும் புவியியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதிகப் பணியிடங்கள் ஒதுக்க வேண்டும்.

                சமச்சீர் கொள்கையின் படி 6ம் வகுப்பு முதல் பொருளாதாரம் மற்றும் வணிகவியல் பட்டதாரிகளையும் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (10ம் தேதி) சனிக்கிழமை சென்னை காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மாநிலத் தலைவர் ரத்தினகுமார் தலைமையில் உண்ணாவிரதம் நடக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior